கையில் எது கிடைத்தாலும் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தது ஒரு காலம்..இப்போதெல்லாம் அதிகம் படிக்க முடிவதில்லை. ஆசையாய் வாங்கி வைத்தும், இன்னும் படித்து முடிக்காத எத்தனையோ புத்தகங்கள் அலமாரியில் !
ஆனால் ஜெயமோகனின் எழுத்து.. படிப்பதில் கண்ட பழைய மோகத்தை மீட்டுத் தருகிறது..அவருடைய 'நிகழ்தல்' புத்தகத்தை (உயிர்மை வெளியீடு-2008) சமீபத்தில் படிக்க வாய்த்தது. சுய அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு. தன் எழுத்தில் ஒரு புகைப்படத்தின் துல்லியத்துடன் காட்சிகளை அனுபவமாக்கித் தருகிறார் ஜெயமோகன். மாதிரிக்கு, 'பிரிவின் விஷம்' என்ற கட்டுரையில் இருந்து முதல் பாரா மட்டும்: (நன்றியோடு)
" வாழ்க்கையை வகுத்துச் சொல்லச் சொன்னால் இப்படி சொல்லுவேன். உறவும், பிரிவும். அவ்வளவு தான்' என்றார் மலையாளக்கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு முழு போதையில். பயங்கரமான ஒரு ஏப்பம். இமைகளை முழு மூச்சாக உந்தி மேலே தூக்கி சிவந்த விழிகளால் என்னைப் பார்த்து 'ஆனால் என்ன விஷயம் என்றால் பிரிவுக்கு உறவை விட நூறு மடங்கு எடை அதிகம்'. ஒரு நிமிட நேரம் தூங்கிய பிறகு கண்ணைத் திறந்து, சட்டைப்பையை மார்பெங்கும் தேடிக் கண்டுபிடித்து, மொத்தக் கையையும் உள்ளே விட்டுத் துழாவி, கசங்கி முதுமை எய்திவிட்டிருந்த சிகரெட்டை எடுத்து, வாய்க்காகத் தேடியபடி 'தீப்பட்டியை எடுடா மயிரே' என்றார்..
..எனக்கு பாலச்சந்திரன் சுள்ளிக்காடோடு அதே அறையில் இருந்தது போன்ற உணர்வு.!.
***
No comments:
Post a Comment